மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள புதிய படம் பற்றி கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. கார்த்தி, துல்கல் சல்மான், நானி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் இப்படி பல பெயர்கள் அவருடைய நட்சத்திரத் தேர்வு பட்டியலில் இருந்தார்கள். ஆனால், கடைசி வரை யார் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை அவராக தெரிவிக்கவில்லை. இப்போது அந்தப் படத்தையே மணிரத்னம் நிறுத்திவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் எதிர்பார்த்தபடி இரண்டு நாயகர்கள், இரண்டு நாயகிகள் கிடைக்காத காரணத்தால்தான் அந்தப் படத்தையே கைவிட்டுவிட்டார் என்கிறார்கள்.
அதனால் தனுஷ் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கிவிட்டார் என்கிறார்கள். தனுஷுக்கென ஹிந்தியில் ஒரு மார்க்கெட் உள்ளது. அவர் அறிமுகமான 'ராஞ்சனா' படம் நல்லதொரு வெற்றியைப் பெற்றது. இரண்டாவதாக வெளியான 'ஷமிதாப்' படம் படுதோல்வியடைந்தது. இருந்தாலும் தனுஷை சிறந்த நடிகராக ஹிந்தி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மேலும், மணிரத்னமும், தனுஷும் இணைந்தால் அதுவும் ஒரு வித்தியாசமான படமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்போதைக்கு படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவாவது தடங்கல் இல்லாமல் நடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.