மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
துபாயில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றும் என்.ராஜேஷ்குமார் பொழுதுபோக்காக குறும்படம் இயக்குகிறவர். இவர் இயக்கிய சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற குறும்படம் சில விருதுகளை பெற்றது. அதனால் அதனை திரைப்படமாக இயக்கி தானே தயாரித்தார். சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்த மிதுன் ஹீரோவாகவும், மிருதுளா ஹீரோயினாகவும் நடித்தனர். ஆதவன் காமெடியனாக நடித்திருந்தார்.
இது சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயிலில் ஒரே இரவில் நடக்கும் கதை. முழு படப்பிடிப்பையும் 15 நாள் ரெயிலை வாடகைக்கு எடுத்து படமாக்கினார். படத்தை கடந்த மாதம் வெளியிட தேதி அறிவித்து விளம்பரம் செய்தனர். படம் பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டது. கடைசி நேரத்தில் படம் வெளிவரவில்லை. தற்போது வருகிற 30ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் என்.ராஜேஷ் குமார் கூறியதாவது: சினிமா மீதிருந்த ஆர்வத்தால் எனது குறும்படத்தை பெரும்படமாக இயக்கினேன். அதற்காக பெரிய கஷ்டத்தையும் அனுபவித்து விட்டேன். ஒரு படத்தை எடுப்பதை விட அதை வெளியிடுவதுதான் சிரமம் என்பதை உணர்ந்து கொண்டேன். யாருமே எனக்கு உதவவில்லை. 150 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்து, தியேட்டர் பேசி விளம்பரம் செய்த நிலையில் திடீரென பெரிய படங்கள் ரிலீசாவதாக கூறி தியேட்டரின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தார்கள். அதனால் என் படங்கள் சரியாக ரீச் ஆகாது என்பதால் வெளியிடாமல் நிறுத்தி விட்டேன்.
இப்போது வருகிற 30ந் தேதி 150 தியேட்டர்களில் வெளியிடுகிறேன். புதிய முயற்சிக்கும், நல்ல படங்களுக்கும் ஆதரவளிக்கும் தமிழ் மக்கள் என் படத்துக்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார் ராஜேஷ்குமார்.