மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.கே.கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது, நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விலைபோவதை ஏற்க முடியவில்லை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகள் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என்று பேசினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தார்கள். இம்மனு விசாரணைக்கு உகந்ததுதான். ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம் என உத்தரவிட்டனர்.