விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். டிவி நடிகையான தீபாவெங்கட்தான் நயன்தாராவுக்காக பின்னணி குரல் கொடுத்து வருகிறார். நயன்தாராவுக்கு தமிழ் நன்றாகப் பேசத் தெரியும். அப்படியும் அவரை யாரும் சொந்தமாக டப்பிங் பேச அழைக்கவில்லையா அல்லது அழைத்து நயன்தாரா மறுத்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரௌடிதான் படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 'மாயா'வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது 'நானும் ரௌடிதான்' படம்தான்.
'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், ''முதன்முறையாக நயன்தாரா தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார், அவரது இந்த முயற்சிக்கு நன்றி என்று நயன்தாராவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 21 அன்று ரிலீசாகிறது.