மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சங்கம் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் களத்தை விட நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பறக்கிறது. சரத்குமார் தலைமையிலான அணியினரும், விஷால் தலைமையிலான அணியினரும் நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்டு வருவதை விட ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை தான் கொள்கையாக கொண்டு செயல்படுகின்றனர். சரத்குமார் அணி சார்பில் நடிகைகள் ராதிகா, சிம்பு, பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு, விஷால் அணியினர் மீது கடுமையான கோபத்தை காட்டினார்.
சிம்பு பேசுகையில்... நடிகர் சங்க பிரச்னையில் இன்று கேள்வி கேட்பவர்கள் கட்டடத்தை இடிக்கும் போது எங்கே போனார்கள். எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தில் என்ன தவறு இருக்கிறது. அங்கு ஏன் திரையரங்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள், பிறகு வேறு என்ன தான் அங்கு வர வேண்டுமாம். எதிரணியினர் என்னை விரோதியாக பார்க்கிறார்கள். பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை.
கட்டடம் தொடர்பான ஒப்பந்தம் சரியானது தான். நான் யாரை பற்றி தவறாக பேச மாட்டேன். நான் எனது குடும்பத்திற்காக இங்கு பேச வந்துள்ளேன். இன்றைக்கு யாரோ வந்து என் சினிமா குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள். என் குடும்பத்தில் பிரிவிணை உண்டாக்க நீ யார்...? நடிகர் சங்கம் பக்கம் வராதவர்கள் எல்லாம் இன்று கேள்வி கேட்கிறார்கள். நீ கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது. நாய் போல அல்ல நரி போல விஷால் அணியினர் செயல்படுகின்றனர்.
இந்த நடிகர் சங்கத்தை பார்த்து நாடே சிரிக்கிறது. குடும்பமாக இருந்த நடிகர் சங்கத்தை விஷால் பிரித்து விட்டார். என் குடும்பத்தை பிரிக்க நான் விட மாட்டேன். நல்லவர்கள் கையில் இந்த சங்கம் இருக்கம் வேண்டும். வருகிற 11ம் தேதி எங்களது அணியின் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். எல்லோரும் ஒன்று திரண்டு வாருங்கள் என்றவர், சங்க ஒற்றுமைக்காக தேர்தலில் இருந்து எங்கள் அணியினர் வாபஸ் பெற தயாராக இருக்கிறோம் என்றார்.
சிம்புவின் அநாகரீகமான பேச்சு
எதிரணியினர் பற்றி குறிப்பாக விஷால் பற்றி சிம்பு பேசும்போது அவன் இவன், நாய், நரி என்று அநாகரீகமாக பேசினார். இதை உடன் இருந்த ராதிகா, பாக்யராஜ் உள்ளிட்ட யாரும் தடுக்கவில்லை.
அணி மாறிய பாக்யராஜ்
நேற்று வரை விஷால் அணியில் இருந்த நடிகர் பாக்யராஜ், இன்று சரத்குமார் அணிக்கு வந்துள்ளார். அவர் பேசும்போது, தனி நபர்களை தாக்கி பேசுவது முறையல்ல, நடிகர் சங்க தேர்தலில் நடுநிலையாக இருக்க விரும்பினேன் என்று கூறினார். அதேசமயம் பாக்யராஜின் மகன் சாந்தனு, விஷால் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.