மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் மூலம் தயாரித்து, இசையமைத்து, பாடல்கள் எழுதி நடித்துள்ள படம் அதிரடி. பெப்சி தொழிலாளர்கள் உதவியின்றி எடுக்கப்பட்ட முதல் படம். பாலு ஆனந்த் இயக்கி உள்ளார். மவுமிதா சவுத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாரும் வரவில்லை.
விழாவில் பாடல்களை வெளியிட்டு நாசர் பேசியதாவது: மன்சூரலிகான் துணிச்சலான நடிகர். யாருக்கும் பயப்படமாட்டார். அவர் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இருக்காது. வார்த்தையில் கோபம் இருந்தாலும் மனதில் அன்பு இருக்கும். சில படங்களில் என்னை அவரைப்போல இமிடேட் செய்து நடிக்க சொன்னார்கள். நானும் முயற்சித்து பார்தேன், என்னால் முடியவில்லை. யாராலும் காப்பி அடிக்க முடியாத நடிகர் அவர். எல்லோரையும் சிரிக்க வைக்கிற அவர் கஷ்டத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ள மாட்டார்.
இவ்வாறு நாசர் பேசினார்.