மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 3500 வாக்குகள் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மற்ற மொழி சினிமா நட்சத்திரங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கெனவே மலையாளத் திரையுலகில் நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் ஆதரவு கேட்டு விஷாலின் அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அடுத்து தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல மூத்த உறுப்பினர்களிடமும் ஆதரவு திரட்ட உள்ளார்களாம். தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனராம். அவர்களது ஆதரவை தெலுங்குத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள நாசர் மற்றும் அவருடைய அணியினர் கேட்டுள்ளார்களாம். விரைவில் சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கத் திரையுலகத்தின் முக்கிய நடிகர், நடிகைகளை அவர்கள் சந்திக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
விஜயகாந்த் தலைவராக இருந்த போதும், சரத்குமார் தலைவராக இதுவரை இருந்த போதும் அதிகமான எதிர்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகர் சங்கத்தில் புதிதாக விஷால் அணியினர் மூலம் ஏற்பட்டுள்ள போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது என்று மூத்த நடிகர்கள் தெரிவிக்கிறார்கள்.