மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விஜய் நடித்து, சமீபத்தில் வெளியான, புலி படம், பல கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், வருமான வரித் துறையினர் உஷாராயினர்.
விஜய் மற்றும் படத் தயாரிப்பாளர் தொடர்பான விவரங்களை விறுவிறுவென சேகரித்து, அவர்கள் தொடர்பான இடங்களில், வருமான வரித்துறையினர், ரெய்டு நடத்தினர்.இதில், கணக்கில் காட்டப்படாத, பல கோடி ரூபாய் வருமானத்துக்கான, கணக்கு வழக்குகள், நகைகள், ஆவணங்களை கைப்பற்றியதாக, வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய், நடிகை கள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் வீடுகளில் நடத்திய சோதனை மூலம், 100 கோடி ரூபாய்க்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதை வருமானமாக கருதி, 30 கோடி ரூபாய் வரையில், அபராதம் விதிக்கப் போவதாகவும் செய்திகள்
வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து, சினிமா வட்டாரங்களில் கடுமையான விமர்சனம் கிளம்பி உள்ளது.
இது குறித்து, சினிமா பிரபலங்கள் சிலர் கூறியதாவது:இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய விஜய், அடுத்த சில நாட்களில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரசில் சேர முயன்றார். இதற்காக அக்கட்சியின், துணை தலைவர் ராகுலை சந்தித்தார். அப்போது, ராஜ்யசபா எம்.பி., பதவியும், இளைஞர் அணி பதவியும் கேட்டார். ஆனால், ராகுல் மறுத்து விட்டார்.இதன் பின், தி.மு.க., ஆதரவு நிலை எடுத்தார். பொருளாளர் ஸ்டாலினை, தளபதி என அழைப்பது போல், தன்னை, இளைய தளபதி என அழைத்துக் கொண்டார்.
தி.மு.க., தலைமையின் வாரிசுகளும், சினிமாவில் தனக்கு போட்டியாக வருகின்றனர் என்றதும், அ.தி.மு.க., பக்கம் திரும்பினார்.அ.தி.மு.க.,வுக்காக, கடந்த சட்டசபை தேர்தலில், சில இடங்களில் மேடை போட்டு பேசினார். தன்னால் தான் வெற்றி என, பேச துவங்கியதும், அவரை, முதல்வர் ஒதுக்கி வைத்தார்.
பின், 2013ல், டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய, ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். 2014ல், லோக்சபா தேர்தல் வந்ததும், பா.ஜ., வெற்றியடையும் என தெரிந்து, மோடியை சந்தித்து, ஆதரவாளராக காட்டிக் கொண்டார்.இப்படி அடிக்கடி நிலை மாறிய விஜய், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள, தன் படங்களில், பஞ்ச் வசனங்களை வைத்தார்.
இந்நிலையில்தான், வருமான வரித் துறையினர், சோதனை நடத்தி, அவரது வீட்டில், கணக்கில் காட்டப்படாத பணத்துக்கான ஆவணங்களை, பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இனியாவது, அவர் ஊழல் பற்றி பேசாமல் இருப்பாரா?இவ்வாறு அவர்கள் கூறினர். -
நமது நிருபர் -