ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'புலி' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள 'சிங்கம் 3' படம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்திலும் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன்தான் நடிக்கிறார்.
தொடர்ந்து சரியான இடைவெளிகளில் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் என டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தை தெலுங்கில் நாகசைதன்யா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதற்காக ஸ்ருதிஹாசனை அணுகிய போது அவர் 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், ஸ்ருதி அதை கடுமையாக மறுத்துள்ளார். 'ஸ்ரீமந்துடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்ருதியைத் தேடி பல தெலுங்கு வாய்ப்புகள் வருகிறதாம். இருந்தாலும் அவர் இன்னும் எந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என்கிறார்கள்.
தற்போதைக்கு தமிழில் புதிதாக இரண்டு பட வாய்ப்புகளையும், ஹிந்தியில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழில் 'புலி, வேதாளம்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகு அவருடைய சம்பளத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.