விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மின்னல் வேக சுற்றுப்பயணத்தில் இருக்கும் சரத்குமார் நேற்று புதுக்கோட்டையில் நாடக நடிகர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர்களிடம் ஆதரவு கேட்டு அவர் பேசியதாவது:
புதுக்கோட்டை எனது சொந்த மாவட்டம் மாதிரி. எனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய பேர் உண்டு. நாடக கலையை வளர்த்ததில் புதுக்கோட்டைக்கு பெரிய பங்கு இருக்கிறது. எனது சொந்த செலவில் புதுக்கோட்டை நாடக நடிகர்கள் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறேன்.
எதிரணியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார்கள். அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறோம். தேர்தல் முடிந்த பிறகு முதல் வேலையாக சங்கத்தின் ஒற்றுமையை பாதுகாப்போம். ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்டிருக்கிறோம். அதை படமாக எடுத்து பத்திரிக்கையில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் ஜெயலலிதா நடிகர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர். அவரிடம் நாங்கள் வாக்கு கேட்கவில்லை. என்றாலும் அவரது ஆதரவு எங்களுக்குத்தான் என்று நம்புகிறோம்.
இவ்வாறு சரத்குமார் பேசினனார். அவருடன் ராதிகா சரத்குமார், ராதாரவி, ராம்கி, நிரோஷா, பாத்திமா பாபு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.