விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒரு இயக்குனர் 33 வருடங்களாக கொஞ்சமும் குறையாத மாஸுடன் வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் மலையாளத்தில் மட்டும் அப்படி சில இயக்குனர்களுக்கு இந்த பெருமை சாத்தியம் ஆகியிருக்கிறது. அதில் ஒருவர்தான் சத்யன் அந்திக்காடு. மலையாள சினிமாவை பொறுத்தவரை, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும்.. அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்புதான்.
வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே இயக்குவது என்கிற பாலிஸி கொண்ட சத்யன் அந்திக்காடு, இந்த வருடம் மோகன்லால், மஞ்சு வாரியாரை வைத்து இயக்கி வெளியிட்ட 'என்னும் எப்பொழுதும்' படம் ஹிட்.. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் கதையை மட்டுமல்ல, படத்தின் ஹீரோ பஹத் பாசில் என்பதையும் தீர்மானித்துவிட்டார்.. கடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட 'ஒரு இந்தியன் பிரணயகதா' என்கிற படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைகிறார்கள்.. அதுமட்டுமல்ல, இது சத்யன் அந்திகாடு இயக்கும் 55வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.