மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒரே மாதிரி இல்லாமல், ஆக்ஷன், பேன்டஸி என அனைத்து தரப்பிலான மற்றும் சவாலான படங்களையே இயக்க தான் விரும்புவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
தினமலர் நிருபருக்கு, இயக்குநர் விஷ்ணுவர்தன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது, யட்சன் படம் எனக்கு 8வது படம். பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதேபோன்று படங்களை என்னால் இயக்கியிருக்க முடியும். அதை நான் விரும்புவதில்லை. ஆக்ஷன், பேன்டசி, சரித்திர படம் என அனைத்து தரப்பிலான மற்றும் சவாலான படங்களையே நான் இயக்க விரும்புகிறேன்.
நான் இதுவரை இயக்கியுள்ள 7 படங்களி்ல், 5 படங்களில் ஆர்யாவும், 2 படங்களில் அஜித்குமாரும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும், என் பட கதையில் எப்போதும் தலையிட்டதில்லை, அவர்களுக்காக, கதையில் எப்போதும் மாற்றங்கள் செய்ததில்லை. குறிப்பாக, அஜித் சார், அவர் என்ன நினைக்கிறாரோ, அதை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். மற்றவர்கள் இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒருபோதும் அவர் நினைக்கமாட்டார். இதுதான், என்னால் அவருடன் 2 படங்கள் செய்ய வைத்தது
என்னை வைத்து படம் எப்போது பண்ணுவே என்று, தம்பி கிருஷ்ணா அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பான். ஆனால், இந்த யட்சன் படத்தின் மூலம், அவனுக்கு விடை கிடைத்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு படம் தந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான் அல்ல. நான் திரைத்துறைக்கு வந்து 12 ஆண்டுகளில் யட்சன் படத்தை சேர்த்து 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளேன். இதில் சில ஆண்டுகள், சும்மா கூட இருந்துள்ளேன்.
என்னுடைய இயக்கத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் பட்டியல் தான், ஏனெனில், எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியும் பயன்படுத்தாமல், அத்தகைய படத்தை கொடுத்ததே, பெரிய சாதனை என்றே கருதுகிறேன். இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கு இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் இயக்கத்தில் நான் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த படம் சர்வம். படம் தோல்வியடைந்ததற்கான காரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை என்பதே உண்மை.