விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த ஓணம் பண்டிகைக்கு முன்பு, கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் ஓட்டிய ஜீப் மோதி, கல்லூரி மாணவி ஒருவர் விபத்துக்குள்ளான விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா..? அந்த மாணவர்கள் சமீபத்திய ஹிட்டான 'பிரேமம்' பட பாணியில் உடையணிந்து, குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும, அதனால் விபத்து ஏற்பட்டதாகவும், திரைப்படங்கள் மாணவர்களுக்கு தவறாக வழிகாட்டக்கூடாது என்றும் டி.ஜி.பி.சென்குமார் கருத்து தெரிவித்திருந்தார்..
ஆனால் சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவி, சினிமாவில் காட்டுவதை அப்படியே இமிடேட் பண்ண ரசிகர்கள் ஒன்றும் குரங்குகள் அல்ல என்றும், பிரமேம ட்ரெண்டை பாலோ பண்ணுவதில் தப்பெதுவும் இருப்பதாக தோன்றவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்... ஆனால் இதை கவனித்த மீடியா ஆட்கள் சிலர், சாய் பல்லவி டி.ஜி.பிக்கு எதிராக இந்த கருத்தை சொன்னதாக எழுதிவிட்டர்களாம்.
அவ்வளவுதான், விஷயம் வேறுவிதமாக திசைமாறிப்போவதை உணர்ந்த சாய் பல்லவி, “நான் அந்த அர்த்தத்தில் சொலவில்லை.. ஒரு படம் இதுபோன்ற விஷயங்களுக்காக கண்டனங்களுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று தான் சொன்னேன்.. நான் சொன்ன வார்த்தைகள் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளன” என்று பதறியடித்து விளக்கம் கொடுத்துள்ளார். நடித்து ஒரு படம் வெளியான நிலையிலேயே சாய் பல்லவி இப்படி கூறியுள்ளது மீடியாவையும், திரையுலகையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.