மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி ஆகிய படங்களில் நடித்தவர் அசோக்செல்வன். இதில் அவர் நாயகனாக நடித்த தெகிடி படம் பெரிதாக ஓடவில்லை. என்றாலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. வெயிட்டான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடியவர் என்கிற பெயரை பெற்றார். விளைவு, அதையடுத்து, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், வரைபடம், 144, பிறைதேடிய நாட்கள் என பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார்.
இந்த நிலையில், தற்போது அமலாபால் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் சில நேரங்களில் படத்திலும் நாயகனாக நடிக்கிறார் அசோக்செல்வன். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றபோது, பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகிய இருவரும்தான் இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த படத்தில் பிரபுதேவாவும் தயாரிப்பாளரான பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்.
மேலும், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் 3 படங்களை தயாரிப்பதாக அறிவித்த பிரபுதேவா, இதில் இரண்டு படங்களில் டி.இமான் இசையமைப்பதாக சொன்னார். ஆனால் அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அப்போது சொல்லவில்லை. இந்நிலையில், இப்போது பிரியதர்ஷன் இயக்கும் அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஆக, பிரியதர்ஷன், ஏ.ஆர்.ரகுமான், பிரகாஷ்ராஜ் என பல ஜாம்பவான்கள் இணைந்துள்ள படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகியிருக்கிறார்.