மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'லிங்கா' படம் வெளியான பிறகு எழுந்த பிரச்சனைகளின்போது பத்திரிகைகளில் அதிகம் அடிபட்ட பெயர் திருச்சி ஏரியாவின் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.
தற்போது 'பாயும் புலி' படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் ரெட் போட்டுள்ள விவகாரத்தில் மீண்டும் சிங்காரவேலன் பெயர் அடிபட துவங்கி உள்ளது.
பாயும்புலி பட வெளியீட்டிற்கு எதிராகவே சிங்காரவேலன் பிரச்சனைகள் செய்வதாகக் கூறி சென்னை நகர காவல்துறை ஆணயரிடம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.
''வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் எஸ்.மதன் தயாரித்து செப்டம்பர் 4ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் புலி. இத்திரைப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், 'லிங்கா' திரைப்பட வெளியீட்டு வகையில் தனக்கு சேரவேண்டிய தொகையைப் பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன், மேலும் தனக்கு தொகை வேண்டுமென மிரட்டி 'பாயும் புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கூறி வருகிறார். ஆகையால், தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியும், பொதுமக்களுக்கு மேற்கண்ட திரைப்படம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியும் வரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து சிங்காரவேலன் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்திருக்கிறார்.