மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காதல் ரோஜாவே படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் இல்லாமல் அமெரிக்கா சென்று விட்டார் பூஜாகுமார். ஆனால் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவரை தனது விஸ்வரூபம் படத்தில் நடிக்க வைத்தார் கமல். அது அவர் எதிர்பார்க்காத மிகப்பெரிய என்ட்ரியாக இருந்தது. அதோடு, விஸ்வரூபம் படத்தின் 2ஆம் பாகம், உத்தமவில்லன் படங்களிலும் பூஜாகுமாருக்கு வாய்ப்பளித்து அவரை முழுசாக தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சென்றார் கமல்.
அதனால், தமிழில் அடுத்தபடியாக படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த பூஜாகுமாருக்கு இப்போது வரை எந்த படமும் கமிட்டாகவில்லை. குறிப்பாக, அவர் எந்த கம்பெனியையும் தேடிச்சென்று சான்ஸ் கேட்கவில்லை. தனது திறமைக்கு வாய்ப்பு தேடி வர வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால் அவரது நடிப்பு பெரிதாக டைரக்டர்களை கவரவில்லையோ என்னவோ யாரும் அவரை புதிய பட விசயமாக சந்திக்கவில்லை.
இந்த நிலையில், உத்தமவில்லனுக்கு பிறகு கமல் நடித்துள்ள தூங்காவனம் படத்திலும் அவரது மனைவி வேடம் தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த பூஜாகுமார், பாபநாசத்தில் கெளதமி நடித்தது போன்று, தூங்காவனத்தில் மலையாள நடிகை ஆஷாசரத் கமலுக்கு மனைவியாக நடித்திருப்பதால், இனிமேல் அந்த இடமும் தனக்கு கிடைப்பது அரிது என்று நினைக்கும் பூஜாகுமார், சென்னையை காலி பண்ணி விட்டு அமெரிக்காவுக்கு பறந்து விட்டாராம்.