ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குவதாக கூறப்பட்ட பூரி ஜெகன்நாத் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியுள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவியிடம் கூறிய படத்தின் கதை அவருக்கு பிடிக்காததால் சிரஞ்சீவியின் 150வது படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவில்லை என தகவல் வெளிவந்தது. பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் வருண் தேஜாவை நாயகனாக வைத்து லோபர் என்ற படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி கோவாவில் துவங்கவுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகருடன் பூரி ஜெகன்நாத் இணையவுள்ளார். தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகரின் தம்பி பூரி ஜெகன்நாத்தின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.