ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
சிம்பு நடித்த வாலு படம் ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்த பிறகுதான் திரைக்கு வந்தது. அதையடுத்து இப்போது, அந்த படத்தை தெலுங்கில் ஷார்ப் என்ற பெயரில் வெளியிடும் டப்பிங் வேலைகள் சென்னையில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மறுபடியும் அந்த படம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று திரும்பியிருக்கிறது. அதாவது, வாலு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரிக்க தொடங்கிய போதே, தெலுங்கு ரைட்ஸ் வியாபாரமாகி விட்டதாம். ஒன்றரை கோடி ரூபாயை அப்போதே நிக் ஆர்ட்ஸிடம் கொடுத்து விட்டார்களாம். ஆனால், இப்போது அவர்கள் தெலுங்கு ரைட்ஸ் பற்றி பேசியபோது, கூடுதல் தொகை தர வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு தெலுங்கு ரைட்ஸை வாங்கிய நிறுவனம், ஒன்றரை கோடி ரூபாய்க்கு மூன்று வருடம் வட்டி போட்டு பாருங்கள். அதுவே பெரிய தொகையாகி விடும் என்றார்களாம். இதையடுத்து பிரச்சினை பெரிதாகி விட்டதாம். நிக் ஆர்ட்ஸ் வாலு படத்தின் தெலுங்கு ரைட்ஸ்க்காக அக்ரிமென்ட் போட்டுக்கொடுத்த விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாம். அதன்பிறகு நடந்த விசாரணைக்குப்பிறகு அதே தொகைக்கு தெலுங்கு உரிமைத்தை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பாகி விட்டதாம். இந்த பிரச்சினை தீர்த்த பிறகுதான் தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் வேலைகள் நடக்கிறது. ஹன்சிகாவுக்கான டப்பிங் இரண்டு நாட்களில் முடிந்து விட்ட நிலையில், தற்போது சிம்புவுக்கான தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.