விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள கோய் சமுயி தீவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரும் தனது மகன் கௌதம் கிருஷ்ணாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவும் மகேஷ் பாபு முடிவு செய்துள்ளாராம். ஓய்விலிருந்து திரும்பியதும் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.