தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
புலி பட டிரைலரில் விஜய்யின் பனி, புலி பன்ச் டயலாக்கையும், சண்டைக் காட்சிகளையும், பிரம்மமாண்டமான அரங்குகளையும், ஸ்ரீதேவியின் தோற்றத்தையும் பற்றிப் பேசி வருபவர்கள் அந்த டிரைலரில் உள்ள மற்றொரு விஷயத்தையும் கவனிக்கத் தவறவில்லை. டிரைலரில் இரண்டு விதமான கேப்ஷன்கள் இடம் பெற்றுள்ளதைத்தான் சிலர் அப்படியே அரசியல் பக்கம் திருப்பி விட்டு பேசிக் கொள்கிறார்கள். அதோடு, அவற்றை தலைவா பட வெளியீட்டுடனும் ஞாபகப்படுத்திப் பேசுகிறார்கள். புதிதாக கிளம்பியுள்ள இந்தப் புயல் இன்னும் அதிகமாக மையம் கொள்ளாமல் இருப்பதும் ஆச்சரியம்தான். ஆனாலும், புலி டிரைலரையும், அரசியலையும் முடிச்சுப் போட்டுப் பேசுபவர்கள் அதை நிறுத்தாமலும் இருக்கிறார்கள்.
புலி டிரைலரில் ஆங்கிலத்தில் இரு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் வாசகம், In a land ruled by darkness, அப்படியென்றால் ஒரு தேசத்தில் நடக்கும் இருள் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அடுத்த வாசகம், There is only one ray of hope, அப்படியென்றால், ஒரே ஒரு கதிர் மட்டுமே நம்பிக்கையாக உள்ளது என்று சொல்லலாம். டிரைலரில், முதல் வாசகத்தையடுத்து, மகாராணி போல காட்சி தரும் ஸ்ரீதேவி என்ட்ரி கொடுக்கிறார். இரண்டாவது வாசகத்தையடுத்து, விஜய் என்ட்ரி கொடுக்கிறார். இந்த இரண்டையும் வைத்துத்தான் சிலர் சிண்டு முடிய ஆரம்பித்திருக்கிறார்கள்.
சரித்திர, ஃபேன்டஸி படம் என்பதையும் மீறி புலி படத்தில் அரசியல் வாடை தூக்கலாகவே இருக்க வாய்ப்புள்ளது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.