மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாள் விழாவை நாளை மறுதினம் அதாவது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றது. சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரைஉலகில் பிரபல நடிகருமான ராம் சரண் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருகிலிருந்து கவனித்து வருகின்றாராம்.
பிறந்தநாள் அழைப்பிதழை ராம் சரணே பிரபலங்களைச் சந்தித்து கொடுத்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் சிரஞ்சீவியின் பிறந்த நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். டோலிவுடிலிருந்தும் நடிகர்கள் நாகார்ஜுனா,வெங்கடேஷ், ராஜேந்திர பிரசாத்,ரவி தேஜா,நிதின்,அல்லு அர்ஜுன்,அல்லு அரவிந்த்,ஜெகபதி பாபு உள்ளிடோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் நடிகைகள் காஜல் அகர்வால்,சமந்தா,ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெனிலியா ஆகியோருக்கும் பிறந்தநாள் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் சகோதரரரும் நடிகருமான பவன் கல்யாண் தனக்கு கொடுத்த அழைப்பிதழை ஏற்று விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அரசியல் வேறுபாட்டால் பிரிந்திருந்த சிரஞ்சீவியையும் பவன் கல்யாணையும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஒரே மேடையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
சிரஞ்சீவியின் பிறந்தநாள் விழா ஹைதராபாத்தில் உள்ள சில்பகல வேதிகா கலையரங்கில் நாளை (ஆகஸ்ட் 21) மாலை 3 மணிக்கு துவங்கவுள்ளது.பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சிரஞ்சீவி கேக் வேட்டி பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலிருந்து பல பிரபலங்கள் விழாவிற்கு வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.