முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
ஒளிப்பதிவாளர் ஜெயபால் கந்தசாமி இயக்குனராகியிருக்கும் படம் யாத்ரீகன். "இது 10 வயது முதல் 45 வயது வரையிலான ஒரு மனிதனின் பயணக்கதை. கதையின் நாயகன் ஆதி (கிஷோர்). சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு செல்ல நேர்கிறது. பூட்டிய அறைக்குள் அமர்ந்து அவன் இந்த உலகத்திற்கு பல கேள்விகளை கேட்கிறான். அதற்கான பதில்களை தேடி அலைவதுதான் படத்தின் கதை. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவனை பாதிக்கும் நிகழ்வுகள் இவை அவனை என்னவாக்குகிறது என்பது திரைக்கதை.
நேபாளம், காங்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வராணாசி, காலிம்பன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. புத்த பூர்ணிமா அன்று புத்த பிட்சுகள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலத்தை படமாக்கி இருக்கிறோம். படத்தின் முக்கிய இடத்தில் இந்த ஊர்வலம் இடம் பெறும். கிஷோரின் சினிமா கேரியரில் இது அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஜெயபால் கந்தசாமி.
வி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரங்கராஜ் இசை அமைக்கிறார், சாயாசிங், சுனுலட்சுமி, சரண் உள்பட பலர் நடிக்கிறார்கள். நாக் ஸ்டூடியோ சார்பில் சோமசேகர ரெட்டி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. வாழ்க்கையின் பல நிலைகளை கடந்து செல்லும் கிஷோர் கடைசியில் புத்த பிட்சு ஆவது மாதிரியான கதை என்கிறார்கள்.