விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அஞ்சான், மாஸ் படங்களை அடுத்து ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், தற்போது யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் நடித்து வருகிறார். அதோடு இதற்கு முன்பு பேரழகன், மாற்றான், ஏழாம் அறிவு என சில படங்களில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்திருக்கும் சூர்யா, இந்த படத்தில் மூன்று விதமான வேடங்களில் நடிக்கிறார்.
ஒவ்வொரு வேடத்திற்குமிடையே நிறைய வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக பாடிலாங்குவேஜ் மட்டுமின்றி வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறாராம் சூர்யா. அதனால்தான் இந்த படத்திற்கு ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் மேற்கொண்டும் சில மாதங்களாக சூர்யா நடிக்க வேண்டியதாகி விட்டதாம்.
முந்தைய இரண்டு படங்களும் அதிர்ச்சி தோல்வி கொடுத்திருக்கும் நிலையில், இந்த படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் சூர்யா, தனது நிலையை சிங்கம்-3 படத்தை இயக்கயிருக்கும் டைரக்டர் ஹரியிடம் சொல்லி, அவரைகூட சில மாதங்களாகவே தனக்காக வெயிட் பண்ண வைத்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தின் மீது சூர்யாவுக்கு நிறைய நம்பிக்கை உள்ளதாம். அதனால், வருகிற தீபாவளிக்கு கமலின் தூங்காவனம், அஜீத்தின் 56வது படங்கள் வெளியாகும் அதே நாளில் தனது 24 படத்தையும் வெளியிடுகிறாராம். இந்தமுறை இரண்டுமுறை தவறவிட்ட வெற்றியை கண்டிப்பாக கைப்பற்றிவிடுவேன் என்றும் முழு நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சூர்யா.
அதுமட்டுமின்றி, இப்படத்தின் நாயகி சமந்தா என்பதால், அவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதோடு சூர்யாவுக்கும் ஆந்திராவில் ரசிகர்கள் இருப்பதால் தமிழில் படத்தை வெளியிடும்போது ஆந்திரா, கேரளாவிலும் வெளியிடுகிறார்களாம். அதனால் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களுக்கான வியாபாரமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.