தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ''36 வயதினிலே'' படத்தில் நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். ஆனால், கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனுடன் தான் கதை கேட்டு வருகிறார். பல கதைகள் கேட்டும் பிடிக்கவில்லை என்று சொன்ன ஜோதிகா, அண்மையில் ஒரு கதையைக் கேட்டார். கதை ஓகே என்று சொன்னதோடு அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளும் நடந்துள்ளன.அப்படத்துக்கு ஜோதிகா மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்கு அப்படத்தின் ஹீரோ கம் டைரக்டர் தயங்கி வருகிறார்.
அவர் வேறு யாருமல்ல... ராகவா லாரன்ஸ் தான். 'காஞ்சனா 2' படத்தின் வெற்றிக்குப் பின்னர் வேந்தர் மூவிஸு'க்காக 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களையும் இயக்கி, நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இவற்றில் நாகா படத்தில் கதாநாயகியாக நடிக்கத்தான் ஜோதிகாவை அணுகினார் ராகவா லாரன்ஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகா நடித்தால் படத்தின் ரேன்ஜ் எகிறிவிடும் என்பதால் அப்படத்துக்கு தன்னுடைய சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட்டைக்கூட தயாரிப்பாளரிடம் சொல்லாமல் இருக்கிறாராம்.
இந்நிலையில் நல்ல நாள் என்பதால் நேற்று படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார்கள். ஆனால் ஜோதிகாவின் சம்பளப்பேச்சுவார்த்தை முடியாததினால் நாகா படத்தின் கதாநாயகி பெயரை அறிவிக்கவில்லை.