போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தில், தானும் இருப்பதாகவும், அப்படத்தில், தனக்கு பவர்புல் ரோல் வழங்கப்பட்டுள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
இதுகுறித்து, வடஇந்திய ஊடகத்திற்கு, ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ரஜினி சாருடன் தான் நடிக்க உள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன், ஏதோ அந்தரத்தில் மிதப்பது போன்று இருந்தது. ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதை, இந்த ஜென்மத்தில் நான் அடைந்த பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.
இயக்குனர் ரஞ்சித், கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வளர்ந்து வருகிறார். அவரின் இயக்கத்தில் பணியாற்ற இருப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மற்ற ஹீரோயின்களைப்போல ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே தோன்றுவது போலன்றி, இந்த படத்தில் தனக்கு பவர்புல் ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக, ரஜினியை நேரில் சந்தித்தது இனிய அனுபவமாக இருந்தது என்று ராதிகா ஆப்தே அந்த பேட்டியில் கூறியுள்ளார்.