விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி நெருங்கி வரவர புலி படத்தைப் பற்றிய பரபரப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'புலி' படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வெளியிடப்படவிருக்கின்றன.
பிரம்மாண்டமாக நடைபெற உள்ள புலி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அதோடு இவர்களுடன் சல்மான்கான், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, கமல் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி 'புலி' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் பாக்கி இருப்பதால் புலி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தகவல் அடிபடுகிறது.
இயக்குநர் சிம்புதேவனிடம் கேட்டால், புலி படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் உக்ரைன், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ரஷ்யா, இத்தாலி என மொத்தம் ஆறு இடங்களில் பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.
மகதீரா, நான் ஈ படங்களில் பணிபுரிந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான கமலக்கண்ணன் தலைமையில் மிகப்பெரிய டீம் ஒன்று புலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர்.