விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் செலுத்துகின்றனர். 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இயக்குனர் நாதிர்ஷா அந்த கூட்டத்தில் ஒருவர் தான்.
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா மூவரையும் வைத்து தான் இயக்கியுள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்திற்கு 'காதல் என்றால் என்ன பெண்ணே.?” என்கிற அர்த்தம் வரும்படியாக கலக்கலான ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.. இந்த பாடலுக்கு நடனம் அமைக்க நம்ம ஊர் தினேஷ் மாஸ்டரை தேடிவந்தவர், இந்த பாடலை பாடவைக்க பாடகர்கள் யாரையும் தேடவில்லை. மூன்று கதாநாயகர்களையும் அழைத்து அவர்களையே பாடவைத்துவிட்டார். இந்த மூவரும் இதுவரை தனித்தனியாக பாடியிருந்தாலும் இணைந்து பாடுவது இதுதான் முதல்முறை.