7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
இயக்குனர் வசந்த் தன் பெயரை தற்போது வசந்த் சாய் என்று மாற்றியிருக்கிறார். வஸந்த் சாய் இயக்கத்தில், 1990ம் ஆண்டு வெளிவந்த முதல் படம் கேளடி கண்மணி. இந்தப் படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நடந்த ஒரு விழாவில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்த கொண்டனர்.
இதில் இயக்குனர் வசந்த்சாய் பேசும்போது கூறியதாவது: 25 ஆண்டுகளில் 11 படங்கள் இயக்கி இருக்கிறேன். எந்தப் படத்திலும் எனது நிலைப்பாட்டை சமரசம் செய்து கொள்ளவில்லை. இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அப்படித்தான் எடுத்தேன். எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. என்னை போன்றே என்னுடன் பணியாற்றியவர்களும் இருந்ததால் என்னால் நல்ல படங்களை கொடுக்க முடிந்தது. வஸந்த்சாயின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு கருத்தை உருவாக்கி இருப்பதே நான் பெற்ற வெற்றி. என்றார்.
வஸந்த் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பள்ளியில் இருந்து வந்தவர். கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர், ரிதம், சத்தம் போடாதே, 3 பேர் 3 காதல் உள்பட 11 படங்களை இயக்கி உள்ளார். சூர்யா, ஜோதிகா, சிம்ரன் உள்பட 21 பேரை அறிமுகப்படுத்தி உள்ளார். ஒரு தேசிய விருதும் 3 மாநில விருதுகளும் பெற்றுள்ளார்.
வஸந்த் சாய் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வருகிற அக்டோபர் மாதம் 2ந் தேதி சென்னை காமராசர் அரங்கில் பிரமாண்ட விழா எடுக்க ஷக்தி ஈவண்ட் ஆர்கனைசிங் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.