மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
''இறக்கும் மனிதர்கள்... இறவா பாடல்கள்...'' என்று அடிக்கடி சொல்பவர் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கடந்தவாரம் ஜூலை மாதம் 14ம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார் எம்.எஸ்.வி., அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் இந்த உலகம் இருக்கும் வரை ஒலித்து கொண்டிருக்கும். இந்நிலையில் எம்.எஸ்.வி.,க்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக ''என்னுள்ளே எம்எஸ்வி.,'' எனும் இசை நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த இருக்கிறார் இளையராஜா. சென்னை, காமராஜர் அரங்கத்தில் வருகிற ஜூலை 27ம் தேதி இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இதுப்பற்றி இளையராஜா கூறியுள்ளதாவது... இந்த இசை நிகழ்ச்சி அண்ணன் எம்.எஸ்.வி., அவர்களுக்கு இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமல்ல, அவரது இசையின் ஆளுமையையும், நுணுக்கங்களையும் விளக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். எம்.எஸ்.வி., அவர்களின் இசை திறமையை அனைவரும் அறிந்ததே. அவரின் இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த இசை நுணுக்கங்களை எல்லாம் இசை குழுவோடு நான் வாசித்து காட்ட போகிறேன். எப்படிப்பட்ட கஷ்டமான விஷயங்களை எல்லாம் சர்வசாதரணமாக அவர் செய்துவிட்டு போய் இருக்கிறார். இசை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். எம்.எஸ்.வி., அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் என்றும் அழியாத சொரூபர். அவரது இசைத்திறமையை வௌிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.