மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் உள்பட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக சேரிப்பெண்ணாக நடித்திருந்தார். சென்னை சிட்டியின் மாடர்ன் பெண்ணான அவர், அந்த படத்துக்காக தன்னை பக்கா சேரிப்பெண்ணாகவே மாற்றிக்கொண்டு நடித்தார். அதனால் அதையடுத்து அவர் மீது பர்பார்மென்ஸ் நடிகை என்கிற இமேஜ் தொற்றிக்கொண்டுள்ளது. அதோடு, கிளாமர் கண்ணோட்டத்தில் அவரை பார்த்தவர்கள்கூட இப்போது வெயிட்டான வேடங்களில் நடிக்க ஐஸ்வர்யாவை அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்போது பல நடிகைகளுக்கும் சேரி கேரக்டர்கள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. அதில் முதலிடம் பிடிப்பவர் வழக்கு எண் மனீஷா யாதவ். முதல் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவர், அதையடுத்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என சில படங்களில் நடித்தார். ஆனால் வேகமாக வளர்ந்த அவர், சீனுராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்திற்கு கமிட்டாகி, வெளியேறியதோடு இயக்குனரைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டதால் மனீஷாவை கோலிவுட் இயக்குனர்கள் ஓரங்கட்டத் தொடங்கினர்.