முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
பொல்லாதவன், ஆதி, தரகு, வன்மம் என பல படங்களில் நடித்தவர் ராண்டில்யா. தற்போது மையம் என்ற படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்திருக்கிறார். ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ராண்டில்யாவின் வேடம் சிறிய வேடம் என்றாலும் கதைக்கு முக்கியமான வேடமாகியிருக்கிறதாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், பாசிட்டிவான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், திருடன், ரவுடி போன்ற நெகட்டிவான வேடங்களே எனக்கு கிடைக்கிறது. சினிமாவில்தான் இப்படி என்றால், நான் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்தபோதும் இதேமாதிரியான வேடங்கள்தான் எனக்கு கிடைத்து வந்தன.
குறிப்பாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை வசனத்தில் உருவான கொக்கரக்கோ என்ற குறும் படத்தில் நான் திருடனாக நடித்தேன். அந்த படத்திற்கு விருது கிடைத்தது. அதேபோல் அதில் திருடனாக நடித்த எனக்கும் விருது கிடைத்தது. இப்படி பல குறும் படங்களில் நான் நெகட்டிவான வேடங்களில் நடித்திருக்கிறேன்.
மேலும், தினமலர் நாளிதழ் 2012ம் ஆண்டில் வெளியான 125 குறும் படங்களில் சிறந்த குறும் படத்திற்கு விருது கொடுத்தது. அப்போது நான் நடித்த 14/6 என்ற குறும் படத்துக்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. அந்த படத்தை பாலாஜி சுப்ரமணியம் இயக்கியிருந்தார். அந்த படத்திலும் நான் ரவுடி கேரக்டரில்தான் நடித்திருந்தேன். அதில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்கவில்லை. என்றாலும் ஒரு விருது படத்தில் நானும் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சி கிடைத்தது.