ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்த படம் ஜிகிர்தண்டா, சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா நடித்திருந்தார்கள். பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். இந்த படத்தின் நெகட்டிவ் உரிமை தன்னிடமே உள்ளது என்றும், இதை வேறு மொழிக்கு விற்கும் உரிமை தனக்கே இருப்பதாகவும், தயாரிப்பாளர் கதிரேசன் வேறு மொழிக்கு விற்க முயற்சிப்பதாகவும் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் உரிமத்தை வேறு மொழிக்கு விற்க தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. தற்போது இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைச்செல்வி கூறியதாவது:
ஜிகிர்தண்டா படத்தை கோடிக் கணக்கில் செலவு செய்து எடுத்தோம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்ட காலத்துக்குள் எடுக்காமல் காலதாமதம் செய்ததால் ஒரு கோடியே 6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தவறான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்ததால் தெலுங்கு உரிமத்தை எங்களால் விற்க முடியவில்லை. அந்த வகையில் 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கார்திக் சுப்புராஜ் எங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் அனைத்து உரிமங்களும் எங்களுடையதே. தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தவறான தகவல்களை வெளியிட்டு எங்கள் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறோம் என்றார் கலைச்செல்வி.