மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஓ காதல் கண்மணி படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததால் உற்சாகமாகிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணியின் வெற்றியை மக்கள் மறந்து போவதற்குள் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். அந்த அடிப்படையில் கார்த்தியை அணுகி இருக்கிறாரா?
அதுதான் இல்லை...மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தான். அந்தப் படத்தில் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கம்போல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மீண்டும் இணைகிறார் பி.சி. ஸ்ரீராம். இந்தப் படத்தை தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். ஓ காதல் கண்மணி படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஸ்டுடியோகிரீன் நிறுவனம், மணிரத்னம் இயக்க உள்ள படத்தை தானே தயாரிப்பதாக அணுகியது.
மணிரத்னம் மறுத்துவிட்டாராம்.