மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சிக்கும் பேய்ப்படம் இயக்குவதில் மட்டுமல்ல தயாரிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. தற்போது அரண்மனை படத்தின் பார்ட் - 2 படத்தை ஹாரர் படமாக இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அப்படத்தைத் தொடர்ந்து தனது அவ்னிசினிமேக்ஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான்... ஹலோ நான் பேய் பேசுகிறேன்... என்ற பேய்ப்படம்.
வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பேயாக நடிக்க இருப்பதும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் என்ற தகவலும் அடிபடுகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் இந்தப் பேய்ப்படம் இருக்க வேண்டும் என திட்டமிட்ட சுந்தர்.சி. அதற்காக வித்தியாசமான கதையைப் பிடித்திருக்கிறாராம்.
அதாவது குறிப்பிட்ட செல்போனிலிருந்து யாருக்கெல்லாம் அழைப்பு வருகிறதோ... அந்த நபர் கொல்லப்படுகிறார். இதுதான் ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. படத்தின் ஒருவரிக்கதை. சில வருடங்களுக்கு முன்னால் 'ஒன் மிஸ்டுகால்' என்ற பெயரில் ஆங்கிலப்படம் வெளியானது. அதன் உட்டாலக்கடி தான் ஹலோ நான் பேய் பேசுகிறேன் படம் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.