ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் தங்களை சுற்றித்தான் கதை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகிகளை தொட்டுக்கொள்ளும் கவர்ச்சி ஊறுகாயாகத்தான் பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் நிறையவே விட்டுக்கொடுக்கிறார் ஜெயம்ரவி.
குறிப்பாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கே தன்னை விட பிரதான கேரக்டர் என்றபோதும், அதை அவர் பெருசுபடுத்தவில்லை. இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹன்சிகா தலைகாட்டாத போதும், அவர் தன்னை விட சிறப்பாக நடித்திருந்ததாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இந்த மாதிரி கதாநாயகிகளின் நடிப்பை எந்த ஹீரோக்களும் இத்தனை ஓப்பனாக இதுவரை சொன்னதில்லை.
இந்த நிலையில், அடுத்தபடியாக அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா-அஞ்சலி இருவரில் த்ரிஷாவின் நடிப்பை புகழ்ந்து பேசி வருகிறாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரியெல்லாம் இப்போது நடிப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை. அது த்ரிஷாவினால் மட்டுமே முடியும் என்று அவர் இல்லாத நேரத்தில் சொன்னாராம். விசயம் த்ரிஷாவின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, இப்படி கதாநாயகிகளின் நடிப்பை பெருமையாக சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது ஜெயம்ரவியிடம் உள்ளது என்று பதிலுக்கு அவரை புகழ்ந்து தள்ளினாராம்.