விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி தயாரிப்பாளராகியிருப்பவர் சி.வி.குமார். அவரது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் வெளியான அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தற்போது 6 படங்களை அவர் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
முக்கியமாக, முன்னணி டைரக்டர்கள் என்பது இல்லாமல், திறமையான புதியவர்களுக்கு அவரது அலுவலக கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன. அதனால் இளையதலைமுறை இயக்குனர்கள் சி.வி.குமாரின் அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், அவரது அலுவலகத்தில் புதியவர்களிடம் கதை கேட்பதற்கென்றே ஒரு இலாகா இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் கேட்ட நூற்றுக்கணக்கான கதைகளில் இருந்து தற்போது 9 கதைகளை அடுத்தடுத்து படம் தயாரிப்பதற்கு ஓகே பண்ணி வைத்திருக்கிறார் சி.வி.குமார். அதனால் அடுத்தபடியாக யாராவது சொல்லும் கதைகள் ஓகே ஆனாலும், இன்னும் ஓராண்டுக்கு பிறகு அந்த கதை படமாக்கப்படுமாம்.