‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டன. ரஜினி -பா.ரஞ்சித் கூட்டணி என்பது பலருக்கு நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது. எதையும் பிரமாண்டமாகச் செய்யும் கலைப்புலி எஸ்.தாணு இந்த புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க விரும்பியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற ரகுமான் இசை என்றால் படத்தின் வியாபார மதிப்பு பல மடங்காகும் என்று நினைத்தாராம்.
எவ்வளவோ முறை இந்த விஷயத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ரஜினியிடம் தாணு கூற ரஜினியோ, ஒரு கட்டத்தில் அவர்கள் படக்குழுவில் ஒரு யூனிட்டாகச் சேர்ந்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி விட்டு விடலாம். ஒரு முறை எல்லாம் மாற்றித்தான் பார்ப்போமே. இத்தோடு இதை விட்டு விடலாமே என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
வெற்றிகரமான முதல்நிலை தொழில்நுட்பக் கலைஞர்களை தேடித்தேடிப் பிடித்து ரஜினி படக்குழு உருவாவது வழக்கம். இப்படி படக்குழுவை இவ்வளவு சுதந்திரமாக இயங்க வைத்திருப்பதை ரஜினியிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றமாகவே பேசிக் கொள்கிறார்கள்.