மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை ராஜாராணி புகழ் இயக்குநர் அட்லீ இயக்குகிறார். இதன் தொடக்கவிழா கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. ஊடகங்களைச் சந்திக்காமல் படபூஜையில் தலை காட்டிவிட்டு விஜய் நழுவி ஓட்டம் பிடித்தார். ஆனால் அட்லீ ஊடகங்களை எதிர்கொண்டு பேசினார். தன் மனைவி வந்த நேரம் எல்லாமே நல்லதாக நடப்பதாக மகிழும் அவர் இந்தக் கதையை தாணுவிடம் கூறிய போது இப்போதுதான் உன்னிடம் கதை கேட்கிறேன். முன்பே ஏன் வரவில்லை? முன்பே உன்னைப் பார்த்து இருந்தால் என் நிறுவனத்திலேயே உன்னை அறிமுகப்படுத்தியிருப்பேனே என்றாராம். ஒரு வெற்றியைப் பெற்று விட்டுத்தான் சந்திப்பது என்று இருந்தேன் என்று அட்லீ பதில் கூறியிருக்கிறார்.
இப்போது அட்லீக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மூன்று கோடி என்று கூறுகிறார்கள். தாணுவிடம் முதல்படம் இயக்கினால் இவ்வளவு சம்பளம் கேட்டிருக்க முடியுமா? அவரும் கொடுப்பாரா? சினிமாவில் வெற்றிதான் முக்கியம். பொதுவாக இயக்குநர்களுக்கு முதல்படத்தின் சம்பளம் மிகவும் குறைவாகவே இருக்கும். எப்படியோ இயக்குநரானால் போதுமென்று கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள். முதல்படம் வெற்றி பெற்று விட்டால் எல்லாமும் சேர்த்து இரண்டாவது படத்தின் சம்பளமாக ஆகி விடும் இதுதான் சினிமா நியதி.