மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முப்பது வயதை கடந்துவிட்ட நயன்தாரா இப்போதும் மார்க்கெட்டில் நம்பர்-ஒன் குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறார். அதோடு, இளவட்ட நடிகர்கள், மேல்தட்டு நடிகர்கள் என்கிற பாரபட்சம் பார்க்காமல் அவர் நடித்து வருவதால், அனைவருக்குமே பிடித்தமான நடிகையாகவும் திகழ்கிறார். ஆனால், சமீபகாலமாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், சரியாக அவரால் ஓய்வெடுக்கவே முடிவதில்லையாம். தூக்கம் குறைவதால் அவரது முகத்தில் பொலிவும் குறைந்து வருகிறது. குறிப்பாக, நயன்தாராவை புதிதாக பார்ப்பவர்கள், என்ன நயன்தாரா இப்படியிருக்கிறார் என்று அதிருப்தியாகும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சேதி நயன்தாராவுக்கும் தெரிந்து விட்டது. முதல் இன்னிங்சில் இருந்தபோது அடிக்கடி கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து வந்த நயன்தாரா, சமீபகாலமாக அதை ஓரங்கட்டி வைத்திருந்தார். ஆனால் இப்போது தனது அழகு குறித்த விமர்சனங்கள் எழுந்திருப்பதால், மீண்டும் அழகு சிகிச்சைகளில் இறங்கி தன்னை மேருகேற்றிக்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.