விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படம் முந்தைய சூர்யா படங்களை விடவும் அதிக அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வியாபாரம் மட்டும் 30 கோடி வரை நடந்திருக்கலாம் என்றும், வெளிநாட்டு உரிமை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் உரிமையாக சுமார் 25 கோடி ரூபாய் வரையிலும், படத்தின் தொலைக்காட்சி உரிமையாக சுமார் 15 கோடி ரூபாய் வரையிலும் நடந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா படத்திற்கு தமிழ்நாட்டைத் தவிர கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. விஜய், அஜித் படங்களை விட அந்த மாநிலங்களில் சூர்யாவின் படங்கள் அதிக வசூலைப் பெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 'அஞ்சான்' படத்தில் கொஞ்சம் தடுக்கி விழுந்து சூர்யா 'மாசு...' படத்தில் மீண்டும் எழுந்து நிற்பார் என்றும் தெரிவிக்கிறார்கள்.
நேற்று இரவே சில வெளிநாடுகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் 'என்டர்டெயின்ட்மென்ட்' ஆக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். சூர்யா, கதை, பின்னணி இசை ஆகிய மூன்றும் படத்திற்கு பிளஸ் பாயின்ட் என்று ஒட்டு மொத்தமாக தெரிவித்துள்ளார்கள். சூர்யாவிற்கு இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றிப் படமாக அமையும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.