'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளிக்கு பின்னர் டைரக்டர் பிரசாத் இயக்கத்தில், உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். படத்தின் வெற்றி இவரை மிகவும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நகுல் சிறிய இடைவெளி விட்டார்.
இதுகுறித்த காரணத்தை நகுலிடம் கேட்டால் படங்களின் எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை, நல்ல கதைகளைத்தான் நம்புகிறேன். ஆகையால் தான் எனக்கு பொறுத்தமான கதைகளை பொறுமையாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்றார். அதிகம் சம்பளம் கேட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதனை நகுல் மறுக்கிறார். கந்தக்கோட்டை படத்தி்ற்கு பிறகு நகுல், நிறைய சினிமா நுணுக்கங்களை தெளிவாக புரிந்து கொண்டு மீண்டும் பரப்பரப்பாக காணப்படுகிறார்.
சிம்ரன் உள்ளிட்ட பிரபலங்களின் மேனேஜராக இருந்த அருண் என்பவரை தனக்கு மேனேஜராக நியமித்துக் கொண்டுள்ளார். ஜிம், டான்ஸ், நடிப்பு என்று சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டார்.
பிரபல இயக்குநர் அதியமான் அவர்களின் புதிய படத்திலும், ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ஈரம் இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இதற்காக சிறிய அளவில் கெட்டப் சேஞ்சும் செய்ய உள்ளார். இதைத்தவிர பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் முதலில் நடிக்க இருக்கிறார். அடுத்தமாதம் இந்த படப்பிடிப்பு தொடங்குகிறது.
மொத்தத்தில் நகுல் 2011ல் பர பர பர, சுறு சுறு சுறு...