போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார் என ரஜினியைப் பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்க, உண்மையில் ஒரே நேரத்தில் பல ப்ராஜன்ட்களில் பிஸியாக இருப்பது கமல்தான். உத்தம வில்லன்' ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து 'பாபநாசம்' படத்தை வெளியிடும் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார் கமல். அதோடு, தனது அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தைத்தொடங்கிவிட்டார். கமலின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அவரின் அசோசியேட் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் த்ரிஷா கதாநாயகி என்றாலும், மனீஷா கொய்ராலா, அனைகா சோதி, உமா ரியாஸ்கான் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'தூங்காவனம்' படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் திட்டத்தில் தெலுங்கு வெர்ஷனுக்கு 'சீக்கட்டி ராஜ்யம்' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் போஸ்டர் அறிமுக விழாவையும் ஆந்திராவிலேயே நடத்தினார். அந்த விழாவில் படத்தின் நாயகன் கமலுடன் நாயகி த்ரிஷாவும் கலந்து கொண்டதோடு, பிரகாஷ் ராஜும், கிஷோரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் கலந்து கெண்டதை வைத்து பிரகாஷ் ராஜும், கிஷோரும்தான் 'தூங்காவனம்' படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற தகவல் அடிபடுகிறது.