மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நயன்தாராவின் நடிப்புக்கு தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் பெரிய சான்றாக அமைந்தது. அப்படத்தில் அவர் நடித்த சீதை வேடத்தில் இதுவரை எந்த நடிகையும் அத்தனை தத்ரூபமாக நடித்ததில்லை என்று ஆந்திர திரையுலகமே அந்த படம் வெளியான நேரத்தில் நயன்தாராவை கொண்டாடியது. அதேசமயம், அந்த படத்திற்கு பிறகு அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாட்டா காட்ட இருப்பதாக கூறியதால், ஒரு மிகப்பெரிய நடிகையை இந்த திரையுலகம் இழக்கப்போகிறது என்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பீல் பண்ணினார்கள். அந்த அளவுக்கு அந்த சீதை வேடம் மூலம் நடிகர் நடிகைகளையே பாதித்திருந்தார் நயன்தாரா.
அப்படிப்பட்ட அவர், மீண்டும் நடிக்க வந்து மறுபடியும் உச்சாணியில் நின்று கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கான ரசிகர்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் அவரிடம் கால்சீட் கேட்டு இயக்குனர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், இந்த நேரத்தில் வருகிற படங்களையெல்லாம் வாரி சுருட்டிக்கொள்ளும் மனநிலையில் நயன்தாரா இல்லையாம். அதாவது, மொத்தக்கதையையும் கேட்பவர், வெறும் கிளுகிளு காட்சிகளில் நடிப்பதை விட படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளே இல்லையே என்று சுட்டிக்காட்டுகிறாராம். அதனால் அவருக்காக சில செண்டிமென்ட் காட்சிகளையும் இணைக்கிறார்களாம் இயக்குனர்கள்.