மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கி தன்னை இயக்குநராக அடையாளம் காட்டிக்கொண்டார். இளையமகளான சௌந்தர்யா கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தின் மூலமாக, ஒரு இயக்குநராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். கோச்சடையான் படத்தின் தோல்விக்குப் பிறகு, படம் இயக்குவதை விட்டுவிட்டு பிரபல படநிறுவனமான ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்றார் சௌந்தர்யா. தற்போது முன்னணி படநிறுவனமாகவும், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதில் முன்னணி நிறுவனமாகவும் விளங்குவதோடு, புதிய படங்களின் உரிமத்தை வாங்கி விற்பதிலும் ஈடுபட்டுள்ளது - ஈராஸ் நிறுவனம்.
இந் நிறுவனத்தின் அனைத்து முக்கிய நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்த செளந்தர்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து "குழந்தை நன்றாக வளர்ந்த பிறகு, வேலைக்குப்போகலாம்." என்று செளந்தர்யாவுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார் ரஜினி. அப்பாவின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை செளந்தர்யா ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன.