மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
''ஸ்டூடண்ட் நம்பர்-1'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். ஜோர், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் சிபி, ஆனால் எந்தப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. இந்தசூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள சினிமாவில் போராட தயாராகிவிட்டார் சிபி. தற்போது, ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை தரணிதரன் இயக்குகிறார்.
சரித்திரம் கலந்த, திகில் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சிபிராஜ். சிபிராஜ் உடன் கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸச்சேரியும் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் ஹீரோயின் யார் என்று முடிவாகமல் இருந்த சூழலில், இப்போது பிந்து மாதவி நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சவாலே சமாளி, கலக்குற மாப்ளே படங்களில் நடித்து முடித்துள்ள பிந்து மாதவி, அடுத்தப்படியாக ஜாக்சன் துரையில் நடிக்க இருக்கிறார்.