போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கமல்ஹாசன் குடும்பமே ஒரு நடிப்புக் குடும்பம். கமல்ஹாசனின் இரு மகள்களும் தற்போது நடிகைகளாக மாறிவிட்டார்கள். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கிறார். அக்ஷரா ஹாசன் அறிமுகமான 'ஷமிதாப்' ஹிந்திப் படம் படுதோல்வி அடைந்தது. இன்னும் அடுத்த படத்தில் நடிக்க அக்ஷரா சம்மதிக்காமல் இருக்கிறார். அவர் தொடர்ந்து ஹிந்தியில் நடிப்பாரா, அல்லது தமிழில் அறிமுகம் ஆவாரா என்பது தெரியவில்லை.
மகள்கள் இருவருமே இன்னும் அப்பாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் அதைப் பற்றிப் பேசியுள்ளார். “அவ்வை சண்முகி' படத்தை எடுக்க முடிவெடுத்த போது அந்தப் படத்தில் என்னுடைய மகளாக நடிக்க வைக்க அக்ஷராவைக் கேட்டேன். அப்போது மூன்று வயதே ஆன அக்ஷரா தன்னால் 40 நாட்களுக்கும் மேலாக ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதன் பின் ஸ்ருதிஹாசனை என்னுடைய படங்களில் நடிக்க அழைத்த போது தான் அதற்கு இன்னும் தயாராகவில்லை என அவர் பதிலளித்தார்,” என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராக மட்டும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் நடிப்பதற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல் நடித்துள்ள சில படங்களில் அவர் பாடியும் இருக்கிறார். விரைவில் கமல்ஹாசனுடன் அவருடைய மகள்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.