‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தாலே கொஞ்சம் பிரச்சனைதான், அப்படியிருக்க மூன்று ஹீரோயின்கள், அதுவும் மூவருமே முன்னணி ஹீரோயின்களாக இருந்தால் என்ன ஆவது. ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டமாக இருந்தாலும், அந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனருக்குத்தான் திண்டாட்டமாக இருக்கும்.
சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் அரண்மனை 2 படத்தில் ஏற்கெனவே சித்தார்த் நாயகனாக நடிப்பதாகவும், த்ரிஷா, ஹன்சிகா நாயகிகளாக நடிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்தன. இப்போது படத்தில் மூன்றாவது கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பது போலத்தான் சுந்தர்.சி கதை எழுதி இருக்கிறாராம். மூவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் என்பதால் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற பிரச்சனையெல்லாம் எழ வாய்ப்பில்லையாம். மேலே சொன்ன மூன்று ஹீரோயின்களுமே தெலுங்கில் இரண்டு ஹீரோயின்கள் உள்ள படங்களில் நடித்திருப்பதால் இதில் நடிப்பதற்கும் பிரச்சனையாக இருக்காது என்கிறார்கள். அதிலும் சுந்தர்.சி அனைவருடனும் நட்பாகப் பழகி வேலை வாங்கக் கூடியவர் என்பதும் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறார்கள்.
இது மட்டும் உறுதியானால் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே படத்தில் மூன்று முன்னணி ஹீரோயின்கள் நடிக்கும் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும்.