தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் குழுவினருக்கும், விஷால் குழுவினருக்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. சரத்குமார் பின்னணியில் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் உள்ளனர். விஷால் பின்னணியில் ஆர்யா, ஜீவா, நாசர் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு தனியார் தியேட்டர் நிர்வாகத்திற்கு குறைந்த விலையில் நீண்ட கால குத்தகைக்கு விட விஷால் அணியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரு அணியினருக்குமிடையே அடிக்கடி கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'உத்தம வில்லன்' விவகாரத்தில் சரத்குமாருக்கு விஷால் வாழ்த்து தெரித்திருந்தார். அதன் பின் விஷால் ஆதரவு நட்சத்திரங்களுக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை. நேற்று விஷால், “இதை நான் கல்லூரியில் முன்னர் செய்திருக்கிறேன், இப்போது மீண்டும். அனைத்துமே நல்ல விஷயத்திற்காகத்தான். தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் நேரம் இது,” என மறைமுகமாக நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறாரோ என யோசிக்க வைக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் களத்தில் குதித்தால் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.