‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லிங்கா, யாத்ரா என்று இரண்டு மகன்கள். ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகி உள்ளார். இந்த புதிய குழந்தையுடன் ரஜினிகாந்திற்கு இப்போது மூன்று பேரன்கள்.
70களிலேயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்று பாலசந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தன்னைப் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா. மகள்கள் இருவரையும் திரைத் துறையிலேயே பணியாற்ற ரஜினிகாந்த் சம்மதித்தார்.
ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். சௌந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்கினார். மகள்களைப் போல தன்னுடைய மூன்று பேரக் குழந்தைகளையும் திரைத் துறையில் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்துவாரா என்பது இன்னும் 15 வருடங்கள் கழித்துத் தெரியும்.