மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்ட முடிவு எடுத்துள்ளனர். மேலும் மெகா ஸ்டார் இந்த பிறந்த நாளில் தனது 150வது படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சந்தித்த அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக தங்களுக்கு உள்ளேயே பணம் வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆள் ஒன்றிக்கு ரூ 5 ஆயிரம் வரையில் பெறப்பட்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட ரூ 50 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை அவரது ரசிகர்கள் திரட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனை எப்படியோ தெரிந்த கொண்ட பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரொம்பவே அப்செட் ஆகினாராம். உடனடியாக பவன் கல்யாண் மெகா ஸ்டாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் சிலரை அழைத்து செம டோஸ் விட்டாராம். மெகா ஸ்டாரின் பெயரில் பண வசூல் செய்து அவரது பெயரை கெடுத்து விடாதீர்கள் என்று கடிந்து கொண்டாராம். இதனால் மெகா ஸ்டாரின் பெயர் காப்பாற்றப்பட்டதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.